சந்திரிக்கா அரசாங்கத்துக்கு எச்சரிக்கை.

அரசாங்கம் திருடர்களுடன் இணைந்து ஆட்சியமைத்தால் மக்கள் மீண்டும் பாடம்புகட்டுவரென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
கட்டுநாயக்கவில் அமைந்துள்ள விஜயகுமாரதுங்கவின் நினைவுத் தூபிக்கு அஞ்சலிசெலுத்திவிட்டு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் திருடர்களைப் பிடிக்காததால் அரசாங்கத்திற்கு மக்கள் பாடம்புகட்டியுள்ளனர்.

இதேவேளை, தற்போதைய அரசாங்கம் மீண்டும் திருடர்களுடன் சேர்ந்து ஆட்சியமைத்தால் மக்கள் மீண்டும் பாடம் புகட்டுவர் எனவும் தெரிவித்தார்.
-VK-
Previous Post Next Post