மட்டக்களப்பு மீனவர் வலையில் பாம்புகள்; அனார்த்தத்திற்கு அறிகுறியா?

மட்டக்களப்பு, நாவலடியில் நேற்று காலை கரைவலை தொழிலில் ஈடுபட்ட அனைத்து மீனவர்களின் வலைகளிலும் பாம்புகள் மட்டுமே பிடிபட்டுள்ளன. அண்மைக்காலமாக கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் பாரிய துன்பங்களுக்கு மத்தியில் தங்களது வாழ்கையினை கொண்டு செல்கின்ற நிலையிலேயே ஏமாற்றம் நிகழ்ந்துள்ளது.
 நாட்டில் அசாதாரண சூழ்நிலை தொடர்ந்து வரும் நிலையில், இவ்வாறு பாம்புகள் மட்டும் பிடிப்பட்டுள்ளமையானது மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், அரசு தங்களுக்கு எந்தவிதமான உதவிகளையும் வழங்குவது இல்லை என்றும் மீன்பிடி தொழிலை ஜீவனோபாயமாக கொண்ட மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். மேலும், இவ்வாறு அதிகளவிலான பாம்புகள் ஏன் பிடிபடுகின்றன என்பது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் மற்றும் இலங்கையில் சுனாமி அனர்த்தம் ஏற்படலாம் என அண்மைக்கால பல தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் பெருந்தொகை பாம்புகள் கடற்கரையை அன்மித்த பகுதியில் பிடிபட்டுள்ளன. 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரனர்த்தத்தின் போதும் இவ்வாறு பெருந்தொகை பாம்புகள் கரைக்கு வந்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


-நன்றி சுடர் ஓளி-
Previous Post Next Post