பொத்துவில் வெளிநாட்டு இஸ்லாமிய அமைப்பின் ஏற்பாட்டில் இன்று 2017.11.26 ஞாயிற்றுக்கிழமை பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகர் டீ.எல்.மனாப் தலமையில் இடம்பெற்றது.
பொத்துவிலின் கல்வி கலாச்சாரம் மற்றும் சமூக பணிகளில் தங்களது உழைப்பில் பெறப்பட்ட ஊதியங்களை ஏழைகளுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நன்னோக்கில் பொத்துவிலைப் பிறப்பிடமாகக் கொண்டு காட்டார் நாட்டில் தொழில் நிமித்தம் வாழும் பொத்துவில் இளைஞர்களால் உருவாக்கப்பட்ட பொத்துவில் வெளிநாட்டு இஸ்லாமிய அமைப்பு கடந்த காலங்களில் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்குகள், பள்ளிவாயல்களுக்கான அன்பளிப்புக்கள், ஏழை மாணவர்களுக்கு கற்பதற்கான வட்டியற்ற இலகு கடன் வசதிகள் என்பவற்றையும் மேற்கொண்டுள்ளது.
குறித்த இரத்ததான நிகழ்வில் பெருமளவிலான இளைஞர்கள், யுவதிகள் கலந்து கொண்டதுடன் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பொத்துவில் ஆதார வைத்தியசாலை வைத்தியட்சகர் டீ.எல்.மனாப், இரத்த வங்கி பொறுப்பு வைத்தியர் சுமுது அநுராதா, இரத்த வங்கி பொத்துவில் இணைப்பாளர் பொதுச் சுகாதார வைத்திய பரிசோதகர் எம்.எஸ்.எம்.அப்துல் மலீக், பொத்துவில் வெளிநாட்டு இஸ்லாமிய அமைப்பின் உப தலைவர் அப்துல் குத்தூஸ் மௌலவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
-எம்.எஸ்.சம்சுல் ஹுதா-
பொத்துவிலின் கல்வி கலாச்சாரம் மற்றும் சமூக பணிகளில் தங்களது உழைப்பில் பெறப்பட்ட ஊதியங்களை ஏழைகளுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நன்னோக்கில் பொத்துவிலைப் பிறப்பிடமாகக் கொண்டு காட்டார் நாட்டில் தொழில் நிமித்தம் வாழும் பொத்துவில் இளைஞர்களால் உருவாக்கப்பட்ட பொத்துவில் வெளிநாட்டு இஸ்லாமிய அமைப்பு கடந்த காலங்களில் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்குகள், பள்ளிவாயல்களுக்கான அன்பளிப்புக்கள், ஏழை மாணவர்களுக்கு கற்பதற்கான வட்டியற்ற இலகு கடன் வசதிகள் என்பவற்றையும் மேற்கொண்டுள்ளது.
குறித்த இரத்ததான நிகழ்வில் பெருமளவிலான இளைஞர்கள், யுவதிகள் கலந்து கொண்டதுடன் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பொத்துவில் ஆதார வைத்தியசாலை வைத்தியட்சகர் டீ.எல்.மனாப், இரத்த வங்கி பொறுப்பு வைத்தியர் சுமுது அநுராதா, இரத்த வங்கி பொத்துவில் இணைப்பாளர் பொதுச் சுகாதார வைத்திய பரிசோதகர் எம்.எஸ்.எம்.அப்துல் மலீக், பொத்துவில் வெளிநாட்டு இஸ்லாமிய அமைப்பின் உப தலைவர் அப்துல் குத்தூஸ் மௌலவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
-எம்.எஸ்.சம்சுல் ஹுதா-