பொத்துவில் கொட்டுக்கல் கடலில் நீராடிய இருவர் மாயம்

2016.03.04   இன்று பகல் 3 மணியளவில் பொத்துவில் கொட்டுக்கல் கடலில் நீராடிக்கொண்டிருந்த ஏறாவூரைச்சேர்ந்த  சின்னலெப்பை முகம்மத் பஹாத்(14), ராகுல் ரம்சான்(18) ஆகிய இருவர் கடலில் மூழ்கியுள்ளனர் .
குறித்த பிரதேசத்தில் கடல் அலைகள் அதிகமாக இருந்ததாக பிரதேசவாசிகள் குறிப்பிடுகின்றனர்.

காணமல் போன தகவலை அறிந்து அங்கு கூடிய மக்கள் மற்றும் பொலிசார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டும் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என அறிய முடிகின்றது.

இவர்களுடன் சேர்ந்து கடலில் மூழ்கிய மற்றுமொரு இளைஜர்  காப்பாற்றப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிசார் மேற்கொண்டு வரும் அதே வேலை மீண்டும் நாளையும் தேடுதல் நடவடிக்கை இடபெறும் என அறியமுடிகின்றது.
-சம்சுல் ஹுதா-
Previous Post Next Post