Top News

இணக்கப்பாடு குறித்து மைத்திரி - மஹிந்த அடுத்தவாரம் சந்திப்பு

ஒரே அணியினர் இரு வரு கட்சிகளாக பிளவுபட்டு ஒருவரை ஒருவர் விமர்சித்து அரசியல் செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை. முதலில் பொது இணக்கப்பாடு அடிப்படையில் நாம் ஒரு தீர்மானத்தை எட்ட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணைந்து பயணிப்பது குறித்து பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் கட்சியின் நிலைப்பாடு என்னவென வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் நாம் இணைய மாட்டோம்  என கூறவில்லை. அது குறித்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை அவர்களும் நிராகரிக்கவில்லை. இந்த விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் நேரடியாக சந்தித்து தீர்மானம் எடுக்க வேண்டும். 

அடுத்த வாரம் இந்த சந்திப்பு இடம்பெறும். அதுவரையில் கட்சியின் தீர்மானம் குறித்து சிந்திக்க வேண்டிய அவசியம். இல்லை. கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கை குறித்து கட்சியின் மதிய குழுவில் கூடி தீர்மானம் எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். 
Previous Post Next Post