Top News

ஹெரோயின் மற்றும் செயற்கை போதை மாத்திரைகளுடன் நபர் கைது



(புவி)

ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் செயற்கை போதை மாத்திரைகளுடன் நபரொருவர் நேற்று பஞ்சிகாவத்தை பிரதேசத்தில் வைத்து கொழும்பு மத்திய சட்ட அமுலாக்கல் பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பஞ்சிகாவத்தை பகுதியில் வைத்து ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் செயற்கை போதை மாத்திரைகளுடன் நபரொருவர் நேற்று கொழும்பு மத்திய சட்டஅமுலாக்கல் பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

இச்சம்பவத்தின் போது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டார். இவ்வாறு இவரை கைதுசெய்த வேளையில் அவரிடமிருந்து 3 கிராம் 510 மில்லிகிராம் ஹெரோயினும் 84 செயற்கை போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த சந்தேகநபரை நேற்று மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்ததுடன் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு மத்திய சட்டஅமுலாக்கல் பிரிவு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Previous Post Next Post