இளைஞர்கள் மத்தியில் புகைப்படக் கொண்டாட்டம் நடத்தி மகிழ்ந்தார். இப்படி ஒரு தலைவர் நம் சமூகத்துக்கு வேண்டுமா? இனவாதம் என்பது சமூகத் தலைவர்கள் மூலமாக தோன்றுவது அப்படியான தலைவர்களை நாம் மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுப்பது நம் அறிவின்மையை உணர்த்துகிறதல்லவா?
நம் நாட்டுப் பிரஜைகள் கட்டார் நாட்டில் சம்பளம் இல்லாமலும்.பல நிறுவனங்கள் பல மாதச் சம்பளத்தை பிடித்துக் கொண்டும். இவர்களை வதைப்பதைப் பற்றிப் பேசினாரா? கட்டார் நாட்டுக்குச் சென்றவர்களின் பிரச்சினைகள் என்ன என்று அறியாமல். அமைப்பாளர் பதவி பற்றிப் பேசுவது பயன்தரக் கூடிய விடயமா?
முஸ்லிம்களின் உயிர் நாடியாக வளர்க்கப்பட்ட கட்சித்தலைவர் சார்லி சாப்ளின் போன்று வித்தைகள் காட்டலாமா?
இலங்கை நிலவரம் பற்றி அறிந்தும். அதை செவிமடுக்காமல் அவரின் நண்பரின் ஹோட்டலை அறிமுகப்படுத்த கட்டார் செல்லலாமா?
கிழக்கு மாகாண மக்களை கிழக்கில்தான் ஏமாற்றினார் அதை மத்திய கிழக்கிற்கும் போய் நிரூபித்துக் காட்டினார்.
காலம் போகும் முன்னே நம் காலடி கட்டாரிலும் பட வேண்டும் என்ற என்னத்தில் வந்தவர் சாதித்திது என்ன?
-தமீம் பொத்துவில்-