Top News

பன்னிரன்டு வயது சிறுமி வளர்ப்புத் தந்தையால் வல்லுறவு???வளர்ப்புத் தந்தை கைது

திருகோணமலை கோமரங்கடவல பிரதேசத்தில் பன்னிரன்டு வயதுடைய சிறுமியை வல்லுறவுக்குட்படுத்த முயன்ற வளர்ப்புத் தந்தையை இம்மாதம் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் சுபாசினி சித்திரவேல் நேற்று ஞாயிற்றுக்கிழமை  (6)உத்தரவிட்டார்.                        
ரங்கிருல் உல்பத்த,கோமரங்கடவெல, பிரதேசத்தைச் சேர்ந்த 37வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.                      

குறித்த சந்தேக நபரின் மனைவி முதல் திருமணத்தின் போது கிடைத்த பன்னிரன்டு வயதுடைய சிறுமியை இரவு நேரத்தில் சிறுமியின் அரைக்குல் சென்று வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்ததாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் குறித்த பெண்ணின் கணவரை  கைது செய்து திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிவான் உத்தரவிட்டார்.                                

 இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை கோமரங்கடவெல பொலிஸார்மேற்கொண்டு வருகின்றனர்
-எப்.முபாரக்-
Previous Post Next Post