Top News

திருகோணமலை மாவட்ட தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் சம்பந்தமான கலந்துரையாடல்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் அவர்களின் தலைமையில் திருகோணமலை மாவட்ட தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் சம்பந்தமான கலந்துரையாடல் 29.02.2016 மாலை 5.00 மணிக்கு அவருடைய திருகோணமலை இல்லத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் உட்பட மாகாணசபை உறுப்பினர்கள் கிராமமட்ட முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டிருப்பதை படங்களில் காணலாம்.
-சேனையூர் நிருபர்-
Previous Post Next Post