ஒருவனை மூன்று மாதமாகக் காதலித்து அவனால் கர்ப்பமாக்கப்பட்ட யாழ்ப்பாண யுவதி கொழும்பில் உள்ள விபச்சார விடுதிக்கு விற்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதலனால் கர்ப்பமாக்கப்பட்ட போது தான் கர்ப்பமடைந்ததாக யுவதி காதலனுக்குத் தெரிவித்த போது அவன் அவளை தேனிலவுக்கு என ஏமாற்றி கொழும்புக்கு கொண்டு சென்றுள்ளான்.
அங்கு வைத்து கர்ப்பப் பரிசோதனை செய்வதாக ஏமாற்றி அவளை ஒரு தனியார் மருத்துவரிடம் கொண்டு சென்று அவளுக்கு மயக்க ஊசி ஏற்றி கருவைக் கலைத்துள்ளான்.
மயக்கம் தெளிந்த யுவதி தனது கரு அழிக்கப்பட்டதை அறிந்து அழுததுடன் காதலனிடம் இது பற்றிக் கேட்ட போது காதலனின் தாயாரும் சகோதரியுமாக அவளைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
அத்துடன் காதலன் வெளிநாடு செல்வதை அறிந்து கட்டுநாயக்காவுக்கு காதலி ஓடிச் சென்று அவனை தடுத்து நிறுத்த முற்பட்ட போது காதலனின் தாயும் தங்கையுமாகச் சேர்ந்து அவளை அங்கு தடுத்துள்ளனர்.
இதன் பின்னர் அங்கு நின்ற பொலிசார் இது தொடர்பாக விசாரணை செய்ய முற்பட்ட போது அவர்களைச் சமாளித்துவிட்டு யுவதியை காதலினின் தாயார் அழைத்து வந்து நீர்கொழும்புப் பகுதியில் உள்ள விபச்சார விடுதி ஒன்றில் விற்றதாக தெரியவருகின்றது.
அதன் பின்னர் அந்த விடுதிக்கு சென்ற நபர் ஒருவர் கருனை கொண்டு குறித்த யுவதியை வெளியே எடுத்துவிட்டு அவளுக்கு பண உதவி செய்து யாழ்ப்பாணத்திற்கு கூட்டி வந்ததாகத் தெரியவருகின்றது.
தற்போது தனக்கு நடந்த கொடுமைகள் பற்றி யாழ்ப்பாணப் பொலிசாரிடம் யுவதி வாக்குமூலம் அளித்துள்ளார்.
-newj-
காதலனால் கர்ப்பமாக்கப்பட்ட போது தான் கர்ப்பமடைந்ததாக யுவதி காதலனுக்குத் தெரிவித்த போது அவன் அவளை தேனிலவுக்கு என ஏமாற்றி கொழும்புக்கு கொண்டு சென்றுள்ளான்.
அங்கு வைத்து கர்ப்பப் பரிசோதனை செய்வதாக ஏமாற்றி அவளை ஒரு தனியார் மருத்துவரிடம் கொண்டு சென்று அவளுக்கு மயக்க ஊசி ஏற்றி கருவைக் கலைத்துள்ளான்.
மயக்கம் தெளிந்த யுவதி தனது கரு அழிக்கப்பட்டதை அறிந்து அழுததுடன் காதலனிடம் இது பற்றிக் கேட்ட போது காதலனின் தாயாரும் சகோதரியுமாக அவளைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
அத்துடன் காதலன் வெளிநாடு செல்வதை அறிந்து கட்டுநாயக்காவுக்கு காதலி ஓடிச் சென்று அவனை தடுத்து நிறுத்த முற்பட்ட போது காதலனின் தாயும் தங்கையுமாகச் சேர்ந்து அவளை அங்கு தடுத்துள்ளனர்.
இதன் பின்னர் அங்கு நின்ற பொலிசார் இது தொடர்பாக விசாரணை செய்ய முற்பட்ட போது அவர்களைச் சமாளித்துவிட்டு யுவதியை காதலினின் தாயார் அழைத்து வந்து நீர்கொழும்புப் பகுதியில் உள்ள விபச்சார விடுதி ஒன்றில் விற்றதாக தெரியவருகின்றது.
அதன் பின்னர் அந்த விடுதிக்கு சென்ற நபர் ஒருவர் கருனை கொண்டு குறித்த யுவதியை வெளியே எடுத்துவிட்டு அவளுக்கு பண உதவி செய்து யாழ்ப்பாணத்திற்கு கூட்டி வந்ததாகத் தெரியவருகின்றது.
தற்போது தனக்கு நடந்த கொடுமைகள் பற்றி யாழ்ப்பாணப் பொலிசாரிடம் யுவதி வாக்குமூலம் அளித்துள்ளார்.
-newj-