இளைஞர் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன

எதிர் வரும் 7.11.2015 அன்று நடைபெறவுள்ள  ,இளைஞர் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுப்பத்திரங்களை வேட்பாளர்கள்; இன்று புதன்கிழமை காலை தொடக்கம் நண்பகள் வரை தாக்கல் செய்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச செயலகங்களில் வேட்புமனுப்பத்திரங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை ,இடம் பெற்றதாக தேசிய ,.இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் தெரிவித்தார்.

,இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் ,இளைஞர்க்ள ஆர்வம் காட்டி வருவதுடன் ,இளைஞர்கழக ஆதாரவாளர்களுடன் பிரதேச செயலகங்களுக்குச் சென்ற வேட்பாளர் தமது வேட்புமனுப்பத்திரங்களை பிரதேச செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளரினால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் வேட்புமனுப்பத்திரங்களை ஏற்றுக் கொள்ளும் அதிகாரிகளிடம் கையளித்தனர்.

இந்த வேட்புமனுப்பத்திரங்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை புதன்கிழமை நண்பகள் 12மணியுடன் நிறைவு பெற்றுள்ளன. எதிர் வரும் நவம்பர் மாதம் 7ம் திகதி ,தற்கான தேர்தல் நாடுபூராவும் நடைபெறவுள்ளது.

இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு பட்டிருப்பு கல்குடா ஆகிய தேர்தல் தொகுதிகளில் ,இருந்தும் ஒரு தொகுதிக்கு ஒருவர் வீதம் மூன்று பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
225 பேரைக் கொண்ட ,இந்த ,இளைஞர் பாராளுமன்றத்தில் நாடுபூராவும் 160 தொகுதிகளில் ,இருந்தும் 160 பேரும் ஏனையோர் போனஸ் அடிப்படையிலும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
-ஜவ்பர்கான்-
Previous Post Next Post