நீரில் மூழ்கி இருவர் பலி – பொத்துவிலில் சம்பவம்

பொத்துவில் கொட்டுக்கல் பகுதி களப்பில் மூழ்கி இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர். கொழும்பு 09 தெமட்டக்கோடைப் பகுதியைச் சேர்ந்த அரபாத் அலி (வயது 16), அப்துல்லா அலி (வயது 12) ஆகிய இருவருமே இவ்வாறு பலியாகியுள்ளனர்.
சுற்றுலா நிமித்தம் பொத்துவில் பிரதேசத்திலுள்ள தங்களது உறவினரது வீட்டிற்கு குடும்பத்துடன் வருகை தந்தவர்கள் பொத்துவில் கொட்டுக்கல் பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு தோணியில் களப்பில் சென்றவர்களுக்கு எதிரே யானை நின்றதைக் கண்டு அச்சத்தில் களப்பில் குதித்துள்ளனர். இவ்வாறு குதித்த வேளையே இவர்கள் நீரில் மூழ்கி இறந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

குறித்த இருவரும் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் பொத்துவில் பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேனர்.
Previous Post Next Post