35 இலட்சம் ரூபா பெறுமதியான நவீன எக்ஸ்ரே இயந்திரம் பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு வழங்கி வைப்பு

பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் T.S.R.T.R.ரஜாப் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனையினால் பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு சுமார் 35 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த நவீன டிஜிடல் எக்ஸ்ரே இயந்திரம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.எல்.ஏ.அலாவூதீன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும், இந்நிகழ்வில் நோயாளிகளுக்கான செயற்கை சுவாசம் வழங்குவதற்கான 15 இலட்சம் ரூபா பெறுமதியான கருவியும் வைத்திய அத்தியட்சகரிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எம்.எம்.இஸ்ஸதீன், சம்மாந்துறை மார்பு கிளினிக் வைத்திய அதிகாரி வைத்தியர் சனூஸ் மற்றும் வைத்திய அதிகாரிகள், ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.




-எம்.எஸ்.சம்சுல் ஹுதா, பொத்துவில்-
Previous Post Next Post