சாப்புச் சட்டத்தின் கீழ் அனைத்து வர்த்தக நிலையங்களையும் வெள்ளிக்கிழமைகளில் மூடுமாறு பொத்துவில் தவிசாளர் வேண்டுகோள்!!!

சாப்புச் சட்டத்தினை நடைமுறைப்படுத்தும் பொருட்டு பொத்துவில் பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து வர்த்தக நிலையங்களையும் மார்ச்  முதலாம் திகதி அமுலுக்கு வரும் வகையில் வெள்ளிக்கிழமைகளில் மூடுமாறு பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாஸீத் வேண்டுகோள் விடுத்துள்ளார். இச்சட்ட நடைமுறையானது அனைத்து தனியார் வர்த்தக கம்பனிகளுக்குமானதாகும்.
மேலும், வர்த்தகர்கள் தங்களது வர்த்தக நடவடிக்கைகளுக்கு டிஜிடல் தராசினை நடைமுறைபடுத்துமாறும், குறித்த நடைமுறைகளை பின்பற்ற தவறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன் அவர்களது வியாபார உரிமமும் இரத்துச் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் பள்ளிவாயல்கள், கோவில்கள் ஊடாகவும், துண்டுப்பிரசுரங்கள் ஊடாகவும் பொது அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.


-எம்.எஸ்.சம்சுல் ஹுதா-
Previous Post Next Post