புதிதாக 8 இலட்சம் பேருக்கு சமுர்த்தி-அமைச்சர் தயா கமகே அதிரடி

நாட்டில் வறுமைக்  கோட்டின் கீழ் உள்ள, 8 இலட்சம் ​பேருக்கு, எதிர்வரும் 6 மாதங்களுக்குள் புதிதாக சமுர்த்தி நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகே தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (06) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போது நாட்டில் சமுர்த்தி பயனாளிகளாக 1,385,516 ​பேர் இருப்பதாக, அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

குறித்த பயனாளிகளில், 5 இலட்சம் பேருக்கு ஒரு வருட காலப்பகுதியில் தனியாக வாழ்க்கை நடத்தக்கூடிய வலுவூட்டல் வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக, அமைச்சர் தயா கமகே மேலும் தெரிவித்தார்.
-TM -
Previous Post Next Post