தோப்பூர் பலாஹ் மத்ரஸாவின் இரண்டு ஆண்டு பூர்த்தி விழா.

தோப்பூர் மஸ்ஜீதுல் பலாஹ் பெண்கள் மக்தப் குர்ஆன் மத்ரஸாவின் இரண்டு ஆண்டு பூர்த்தியும் பரிசளிப்பு விழாவும் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) யாஸீன் முஹம்மது முபாரிஸ் மௌலவி தலைமையில் மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசல் மண்டபத்தில் இடம் பெற்றது.
இதன் போது மக்தப் மாணவிகளின் கஸீதா, ஹதீஸ், கவிதைகள், அல்மாவுல் ஹுஸ்னா போன்ற நிகழ்ச்சிகள் இடம் பெற்றது.அத்தோடு மக்தப் ஆரம்பிக்கப்பட்ட இரண்டு வருடங்களில் எவ்வித விடுமுறையும் பெறாத முபாறக் சம்லா என்ற மாணவிக்கு விசேட பரிசில் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது .

இந் நிகழ்வில் அதீதிகளாக மூதூர் காதி நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.றிஸ்வான் மௌலவி, மக்தப் மத்ரஸாக்களின் மூதூர் தொகுதிக்கான கண்காணிப்பாளர் ஹாபீஸ் ரசூல் மௌலவி, தோப்பூர் அல்ஸிபா வித்தியாலய அதிபர் எஸ்.எம்.றஹீம், தோப்பூர் அல்தாஜ் மகாவித்தியாலய அதிபர் ஏ.எல்.கலீல் ரகுமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
-எப்.முபாரக்-
Previous Post Next Post