பசறிச்சேனை மதுபானசாலையை மூட அவசர தீர்மானம்-முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் முபாரக்கின் அதிரடி நடவடிக்கை

முன்னாள் பொத்துவில்  பிரதேச சபை உறுப்பினர் முபாரக்கின் அதிரடி நடவடிக்கையினால் பசறிச்சேனை மதுபானசாலையை மூட அவசர தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது .
பொத்துவில் பசறிச்சேனை பிரதேசத்திலுள்ள மதுபானசாலையை உடனடியாக மூடுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் பொத்துவில் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் முசர்ரத் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

இதன்போது பசறிச்சேனையில் அமைந்துள்ள மதுபான சாலையை உடனடியாக மூடுமாறு பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் முபாரக் வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கமைய குறித்த மதுபான சாலையின் அனுமதி பத்திரத்தை இரத்துச் செய்து மூடுவதாக தீர்மானம் எட்டப்பட்டது.

இந்த கூட்டத்தின்  போது முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் உரையாற்றும்போது :

போதையற்ற சமூகத்தை உருவாக்க வேண்டும் என நல்லாட்சி அரசு முயற்சி செய்துகொண்டிருக்கும் வேலையில் பொத்துவில் பிரதேச செயலகமும் பிரதேச சபையும் எவ்வாறு இதற்கு அனுமதி வழங்கியது என்று கேள்வி எழுப்பினார்.

இந்த மதுபானசாலைக்கு அருகாமையில் பாடசாலை உப தபாலகம் பள்ளிவாயல் என்பன அமைந்துள்ளபோது எவ்வாறு அனுமதி வழங்க முடியும் இது பாடசாலை மாணவர்களை வழிகெடுக்கும் செயட்பாடாகவே உள்ளது.

எனவே குறித்த மதுபானசாலை மூடப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார் .
-நன்றி,செய்தித்தாள்-
Previous Post Next Post