திருகோணமலை சிறைச்சாலையில் சுதந்திர தினத்தினை முன்னிட்டு ஒன்பது கைதிகள் விடுதலை.

இலங்கையின் 68ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் திருகோணமலை சிறைச்சாலையில் இருந்து சிறு குற்றங்கள் புரிந்த ஒன்பது சிறைக்கைதிகள் இன்று வியாழக்கிழமை (4)விடுதலை செய்யப்பட்டார்கள்.
சாராயம்,மற்றும் சிறு தொகை தண்டப்பணம் செலுத்த முடியாத கைதிகளே இவ்வாறு பொது மன்னிப்பின் கிழ் விடுதலை செய்யப்பட்டார்கள்.  

  திருகோணமலை சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர் ஏ.பி.ஜே.ஆர்.சஞ்ஞீவ தலைமையில் கைதிகளை விடுதலை செய்யும் நிகழ்வில் சிறைச்சாலையின் ஜெயிலர்,புனவாழ்வு அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
-எப்.முபாரக்-
Previous Post Next Post