ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் பொத்துவில் அமைப்பாளராக முன்னாள் தவிசாளர் வாசீத் நியமனம்.

பொத்துவில் பிரதேசத்தின் முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளராக பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் வாசீத் அக்கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளராக இருந்த எஸ் எஸ் பி மஜீத் அவர்கள் கட்சி மாறியதிலிருந்து  சுமார் 2 வருடங்களுக்கும் அதிகமான காலம்  அமைப்பாளர் பதவி வழங்கப்படுவதில் பல்வேறு குழப்பங்கள்  நிலவி வந்த நிலையில் கடந்த  18ம் திகதி பொத்துவில் பிரதேசத்திற்கான அமைப்பாளராக பொத்துவில் பிரதேச சபையின் முன்னால் தவிசாளர் வாசீத் அவர்களுக்கு உத்தியோக பூர்வமாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் அவர்களினால் நியமணக்கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த அமைப்பாளராக வாசீத் ஒருவருட காலத்திற்கே செயற்பட முடியும் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-சம்சுல் ஹுதா-


Previous Post Next Post