மனைவி தகாத உறவில் ஈடுபட்டதை நேரில் கண்ட கணவன் தற்கொலை(படங்கள்)

தனது இரண்டாவது மனைவி தகாத உறவில் ஈடுபட்டதை  கண்ட கணவன் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இச்சம்பவம் மட்டக்களப்பு கொக்கடிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரியாவெளியில் இடம் பெற்றுள்ளது.

1ம் திகதி மாலை 6.00 மணியளவில் வயல் வேலைக்குச் சென்று வீடு திரும்பியுள்ளார் 60 வயதுடைய பாளிப்போடி நேசன். இவர் முன்னர் ஒரு திருமணம் செய்து விவாகரத்துப்பெற்றவர் இத்திருமணத்தில் இரு பிள்ளைகள் உள்ளனர்.

பின்னர் வேறொரு பெண்ணை திருமணம் முடித்து வாழ்ந்து வந்தவர்.இத்திருமணத்தில் பிள்ளைகள் இல்லை.
இந்நிலையில் குறித்த தினத்தில் அவர் வீடு திரும்பிய நிலையில் தனது மனைவியின் தகாத நடத்தையை  கண்ட அவர் நஞ்சருந்தியதாக தெரியவருகிறது.

மகிழடித்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் இறந்த நிலையில் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குகொண்டு செல்லப்பட்டுள்ளது.
கொக்கடிச்சோலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
-ஜவ்பர்கான்-

Previous Post Next Post