அட்டாளைச்சேனை மாடு அறுக்கும் இடத்தை மாற்ற நடவடிக்கை

அம்பாறை-அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட மாடு அறுக்கும் இடத்தை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.கலீலுல் றகுமான் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
file pic
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

அட்டாளைச்சேனை 16ஆம் பிரிவில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பராமரிப்பிலுள்ள மாடு அறுக்கம் இடத்துக்கு அருகாமையில் மாட்டின் கழிவுகள் சீரான முறையில் அகற்றப்படாமையினால் துர்நாற்றம் வீசுவதோடு நாய்த்தொல்லையும் அதிகரித்துக் காணப்படுகின்றது.மேலும்,அருகில் உள்ள ஆறும் மாசடைகின்றது.

இதனால் பல்வேறு அசைளகரியங்களுக்குள்ளாகுவதாக இப்பகுதி மக்கள் எமக்கு முறைப்பாடு செய்துள்ளனர். இதையடுத்து,மாடு அறுக்கும் இடத்தினை வேறொரு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த இடம் கிடைத்ததும் மாடு அறுக்கம் இடம் விரைவாக மாற்றப்படும் என்றார்.

இதேவேளை பல வருடமாக இந்த மாடறுக்கும் இடத்தினால் மக்கள் மிகக் கஷ்டத்தை எதிர்நோக்கியதும் குறிப்பிடத்தக்கது.
-சப்னி-
Previous Post Next Post