குமார் சங்கக்காரவிற்கு உயர் ஸ்தானிகர் பதவி

பிருத்தானிய உயர் ஸ்தானிகராக பதவி ஏற்குமாறு விடுக்கப்பட்ட ஜனாதிபதியின் கோரிக்கை தமக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளதாக குமார் சங்ககார தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதன் பின்னரே முடிவொன்றை தாம் எடுக்கவுள்ளதாக குமார் சங்கக்கார குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் குமார் சங்ககார இந்திய அணியுடன் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இன்று ஓய்வு பெற்றார்.

இது தொடர்பான நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன குமார் சங்கக்காரவை பிருத்தானிய உயர்ஸ்தானிகராக பதவி ஏற்குமாறு வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தார்.
-Hn-
Previous Post Next Post