ஊடகவியலாளர் பிரகித் எக்னேலிகொட காணாமல் போனது தொடர்பில், நான்கு இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலேயே கைது செய்யப்பட்டதாக குற்றப்புலனாய்வுத் துறையினர் அறிவித்துள்ளனர்.
கடந்த 2010ஆம் ஆண்டு பிரகித் எக்னேலிகொட காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த வாரத்தில் இந்த சம்பவம் குறித்து சந்தேகிக்கப்படும் இராணுவ வீரர்களை விசாரணைக்காக தம்மிடம் கையளிக்குமாறு காவல்துறையினர் நீதிமன்றத்தின் ஊடாக கோரியிருந்தனர்.
இதன் அடிப்படையிலேயே நான்கு இராணுவ வீரர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றப்புலனாய்வுத் துறையினர் தெரிவித்தனர்.
இவர்களில், இரண்டு லெப்டினண்ட் கேணல் தரத்தைக் கொண்டவர்கள், ஒரு அலுவலக பரிசோதகர் மற்றும் ஒரு கோப்ரல் தரப்பு அதிகாரி ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
-http://goo.gl/NJMFcs-
இவர்கள் இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலேயே கைது செய்யப்பட்டதாக குற்றப்புலனாய்வுத் துறையினர் அறிவித்துள்ளனர்.
கடந்த 2010ஆம் ஆண்டு பிரகித் எக்னேலிகொட காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த வாரத்தில் இந்த சம்பவம் குறித்து சந்தேகிக்கப்படும் இராணுவ வீரர்களை விசாரணைக்காக தம்மிடம் கையளிக்குமாறு காவல்துறையினர் நீதிமன்றத்தின் ஊடாக கோரியிருந்தனர்.
இதன் அடிப்படையிலேயே நான்கு இராணுவ வீரர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றப்புலனாய்வுத் துறையினர் தெரிவித்தனர்.
இவர்களில், இரண்டு லெப்டினண்ட் கேணல் தரத்தைக் கொண்டவர்கள், ஒரு அலுவலக பரிசோதகர் மற்றும் ஒரு கோப்ரல் தரப்பு அதிகாரி ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
-http://goo.gl/NJMFcs-