இந்தியாவிடமும் அமெரிக்காவிடமும் பணம் பெற்றவர்களே இன்று சீனாவிடம் நாம் பணம் பெற்றதாக கூறுகின்றனர் என ஹம்பாந்தோட்டை மாடவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சீனா முன்னாள் ஜனாதிபதியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பணம் வழங்கியதாக நிவ்யோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட செய்தி தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது அதற்கு பதில் அளித்த அவர் இதனை குறிப்பிட்டார்.
அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகம் இலங்கையில் அவர்களுக்கு தேவையான பொம்பை ஆட்சி ஒன்றை உருவாக்க பணம் வழங்கியது என்பது ரகசியம் அல்ல.
கடந்த தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் இருந்து மைத்திரிபால சிரிசேன அவர்களின் பக்கம் செல்ல முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு இந்தியன் ரோ 20 கோடி ரூபாவை வழங்கியதாக அக்கட்சியின் முன்னாள் முக்கியஸ்தர்கள் தேர்தல் மேடைகளில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர்
கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த எமது நாட்டின் சொத்தாக இருந்த ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை தாரை வார்த்து விட்டு இந்த அரசாங்கம் போலியான விடயங்களை தூக்கிப்பிடித்துள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.
-Media Unit-
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சீனா முன்னாள் ஜனாதிபதியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பணம் வழங்கியதாக நிவ்யோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட செய்தி தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது அதற்கு பதில் அளித்த அவர் இதனை குறிப்பிட்டார்.
அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகம் இலங்கையில் அவர்களுக்கு தேவையான பொம்பை ஆட்சி ஒன்றை உருவாக்க பணம் வழங்கியது என்பது ரகசியம் அல்ல.
கடந்த தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் இருந்து மைத்திரிபால சிரிசேன அவர்களின் பக்கம் செல்ல முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு இந்தியன் ரோ 20 கோடி ரூபாவை வழங்கியதாக அக்கட்சியின் முன்னாள் முக்கியஸ்தர்கள் தேர்தல் மேடைகளில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர்
கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த எமது நாட்டின் சொத்தாக இருந்த ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை தாரை வார்த்து விட்டு இந்த அரசாங்கம் போலியான விடயங்களை தூக்கிப்பிடித்துள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.
-Media Unit-