சட்டவிரோத போதைப்பொருட்கள் சிலவற்றுடன் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சந்தேகநபரொருவர் விமான நிலைய போதைத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
காங்கேசன்துறையைச் சேர்ந்த சந்தேகநபரொருவர் நேற்று சென்னையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த வேளையில் இவ்வாறு சட்டவிரோத போதைப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவர் தனது பயணப்பையில் இவ்வாறு ஹெரோயின் 320 கிராம் ஹைஸ் 52 கிராம் மற்றும் அசிஸ் 230 கிராம் அடங்கிய பக்கெட்டுகளை மறைத்து வைத்து கடத்த முயற்சிக்கையிலேயே இவ்வாறு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
இச்சம்பவத்தில் காங்கேசன்துறையைச் சேர்ந்த 57 வயதுடைய நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரிடம் கைப்பற்றப்பட்ட மொத்த போதைப்பொருட்களின் இலங்கை பெறுமதி 47 இலட்சம் ரூபாவாகும்.
மேலும் குறித்த சந்தேகநபரை நேற்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய போதைத் தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
(புவி)