நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் போலி நாணயத்தாள்கள் மற்றும் ஹெரோயின்

தம்புத்தேகம பிரதேச்தில் வாகன பழுது பார்க்கும் இடமொன்றுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களிலிருந்து ஹெரோயின் மற்றும் போலி நாணயத்தாள்கள் அநுராதபுர போதைத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அநுராதபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது,

தம்புத்தேகம பிரதேசத்தி்ல் காணப்படும் தனியாருக்கு சொந்தமான வாகனம் பழுது பார்க்கும் இடத்தில் காணப்படும் வாகனங்களில் ஹெரோயின் போதைப்பொருள் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் நேற்றுமுன்தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது போலி நாணயத்தாள்கள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்த்தியொன்றிலிருந்து 500 ரூபா போலி நாணயத்தாள்கள் 42 உம், அதற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரொன்றிலிருந்து 300 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதுவரையில் இச்சம்பவம் தொடர்பில் எவரும் கைதுசெய்யப்பட்டிருக்கவில்லை என்ற போதிலும் இவ்விடயம் தொடர்பாக தம்புத்தேகம பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

(புவி)

Previous Post Next Post