தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் இப்தார் நிகழ்வும் குடும்ப ஒன்றுகூடலும்!!!

தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட கல்விசாரா ஊழியர்களின் நலன்புரி அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வும் குடும்ப ஒன்றுகூடலும் பிரயோக விஞ்ஞான பீட கேட்போர் கூடத்தில் அமைப்பின் தலைவர் எம்.ஏ.றிபாயிஸ் முகம்மட் தலைமையில் 2018-06-11 ஆம் திகதி இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பீடாதிபதி கலாநிதி யூ.எல்.செயினுடீனும் கௌரவ அதிதியாக பிரதிப் பதிவாளர் ஏ.ஆர். மாஹீறும் கலந்துகொண்டானர். நிகழ்வில் அஷ்செய்க் ஏ.ஆர். உவைஸ் (நளிமி) (உப அதிபர் தேசிய பாடசாலை சம்மாந்துறை) அவர்கள் மார்க்க சொற்பொழிவாற்றினார்.


பிரயோக விஞ்ஞான பீட கல்விசாரா ஊழியர்களும் அவர்களது குடும்பத்தினரும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

-எம்.வை.அமீர்-
Previous Post Next Post