350 வாக்காளர் அட்டைகளுடன் மாயமான தபால் ஊழியர்

இரத்தினபுரி பள்ளேபெத்த பகுதியில் 350 வாக்காளர் அட்டைகளுடன் தபால் ஊழியர் ஒருவர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பள்ளேபெத்த பகுதியில் 350 வாக்காளர் அட்டைகளுடன் தபால் ஊழியர் ஒருவர் தலைமறைவாகியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும்இ தபால் ஊழியரை கண்டுப் பிடிக்க பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-நன்றி சுடர் ஓளி-
Previous Post Next Post