தேர்தலில் பொலித்தீனை பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக, பொலித்தீன், பிளாஸ்டிக் அல்லது அதனுடன் தொடர்புடைய பொருட்களை பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய சுற்றாடல் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக, அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இவ் வருடத்தின் செப்டம்பர் ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட விஷேட வர்த்தமானிக்கு அமையஇ பொலித்தீன் உள்ளிட்ட சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கருதப்படும் சில பொருட்களை சமூக, கலாசார மற்றும் நிகழ்வுகள் போன்றவற்றில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post