கல்குடாத்தொகுதியில் ஸ்ரீ முஸ்லிம் காங்கிரஸின் மாபெரும் இப்தார் நிகழ்வு

கிழக்கு மாகாண முதலமைச்சர் பொறியியலாளர் நஸீர் அஹமட் அவர்களின் ஏற்பாட்டில் ஸ்ரீ முஸ்லிம் காங்கிரஸின் மாபெரும் இப்தார் நிகழ்வு 18.06.2017-ஞாயிற்றுக்கிழமை (நாளை) பி.ப 5.00 மணி முதல் வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இவ்இப்தார் நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவரும், நகரத்திட்டமிடல் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான கௌரவ. அல்ஹாஜ். ரவூப் ஹக்கீம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் இந்நிகழ்வில் ஏனைய அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ. அல்ஹாஜ். செய்யித் அலி ஸாஹிர் மெளலானா அவர்களும், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கெளரவ. அல்ஹாஜ். பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், கல்குடாத்தொகுதி அமைப்பாளருமான அல்ஹாஜ். எச்.எம்.எம். றியாழ் (ACA, ACMA, MBA) அவர்களும், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளர் ஜனாப். கே.பீ.எஸ். ஹமீட் அவர்களும், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ். எச்.எம்.எம். இஸ்மாயில் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். 

குறித்த இம்மாபெரும் இப்தார் நிழ்கவில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

-எம்.ரீ. ஹைதர் அலி-
Previous Post Next Post