நாயுடன் உறவுவைத்த பெண் சிறையில் ; அவுஸ்திரேலியாவில் சம்பவம்

அவுஸ்திரேலியா, பிரிஸ்பேன் நகரில் இளம் பெண் ஒருவர் நாயுடன் தவறு செய்ததாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதையடுத்து அவரை சிறையிலடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு பிறிதொரு குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டிருந்த 27 வயதான ஜென்னா லூயிஸ் டிரிஸ்கொல் என்ற பெண்ணே இவ்வாறு நாயுடன் தகாத உறவில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த  பெண்ணிடம் பொலிசார் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணையினை மேற்கொண்ட போது, நாயுடனான ஆபாச வீடியோவை கண்டு பொலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையடுத்து குறித்த பெண், மிருகங்களுடன் தகாத உறவில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பொலிஸார் பெண் மீது வழக்குத் தொடர்ந்தனர்.

தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றங்களையும் நீதிமன்றில் குறித்த பெண் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதையடுத்து, பெண்ணின் நடத்தை இயற்கைக்கு எதிரானது என்றும், தற்போது, இவரின் தண்டனையை ஒதுக்கி வைக்கப்படுவதாகவும் அதுவரை பெண்ணை சிறையில் அடைக்கும் படியும் நீதிபதி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-வீரகேசரி-
Previous Post Next Post