தூரிகையின் துளிகள் காய்ந்தும் தோகையவள் தனைக் கீறும்-கவிதை

கமலமோ கயல்விழியோ
கவிகளின்  காவியமோ
காதல் கணைதொடுக்கும்
கருங்கூந்தல் போர்க்களமோ ?
செவ்விதழில் நிறமெடுக்கச் 
செந்தாமரை ஏங்குதே!
கட்டெறும்பு தேனெடுக்கக் ,
கன்னங்கள்  தூங்குதே .!

காரிகையின் செழும் அழகில்
கவிதை  இலக்கணம் தடுமாறும் 
தூரிகையின் துளிகள் காய்ந்தும் 
தோகையவள் தனைக் கீறும் 

வில்லிசை  நான் படிக்க
மெல்லினம் நாணியதே
சட்டென்று  பாட்டெழுதத் 
பாவலர்கள் படைவந்ததே!
-சிமாரா அலி-
Previous Post Next Post