கமலமோ கயல்விழியோ
கவிகளின் காவியமோ
காதல் கணைதொடுக்கும்
கருங்கூந்தல் போர்க்களமோ ?
செவ்விதழில் நிறமெடுக்கச்
செந்தாமரை ஏங்குதே!
கட்டெறும்பு தேனெடுக்கக் ,
கன்னங்கள் தூங்குதே .!
காரிகையின் செழும் அழகில்
கவிதை இலக்கணம் தடுமாறும்
தூரிகையின் துளிகள் காய்ந்தும்
தோகையவள் தனைக் கீறும்
வில்லிசை நான் படிக்க
மெல்லினம் நாணியதே
சட்டென்று பாட்டெழுதத்
பாவலர்கள் படைவந்ததே!
-சிமாரா அலி-